Friday, 24 June 2016

மறவர் சாதி கைபீது

மறவர் சாதி கைபீதுசுவடி மறவர் இனத்தின் உட்பிரிவுகளையும், மணமுறைகளையும், விதவை மறுமணம் மற்றும் மறவர்களுடைய திருமண சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது.  கட்டுத்தாலி, சீக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள் நடைபெறும் முறையை விவரிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.

காலின் மெக்கன்சியின் தொகுப்பு சென்னை பல்கலைக் கழக வெளியீடாக தமிழிலும் வந்துள்ளது. 

Saturday, 11 June 2016

ரிபெல் சிலை திறப்பு - மறத்தமிழர் சேனை தொடர் போராட்டம்.



பெரிய மறவர் நாடு என வரலாறு போற்றும் இராமநாதபுரம் சீமையானது தனது வரலாற்றை செங்குருதியால் எழுதிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சாத பல மாமறவர்களை தந்திருக்கிறது. அப்படிதான் 1760 ஆம் வருடம் மார்ச்-30 இல் பிறந்த முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி தமது 12 வயதில் இராமநாதபுரம் மறவர் சீமையின் மன்னராக முடிசூட்டப்பட்டவர் ஆவார். ஆங்கிலேயர்கள், நவாபுகளின் கட்டற்ற வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்கவரி விதித்தவர், அந்நிய மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்ததன் விளைவாக 2-06-1772 இல் தனது தாயார், சகோதரியோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாண்டுகள் சிறையிலேயே வாடிய மன்னரின் தாயார் சிறையிலேயே மரணமடைந்தார்.

மறவர் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதும் அஞ்சிய ஆங்கிலேயர்கள் 1782 இல் மன்னரை விடுதலை செய்தனர். மீண்டும் நல்லாட்சி செய்யத்துவங்கிய இவரது காலத்தில்தான் உலகப்புகழ் பெற்ற இராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. அதனைப்போலவே கடுகு சந்தை, தேவிபட்டினம், கோட்டைப்பட்டிணம் அன்னசத்திரங்கள் கட்டப்பட்டன. ஆயிரமாயிரம் பரப்பளவு கொண்ட நிலங்கள் முறையாக அளவிடப்பட்டன. மீண்டும் வலுவடையத் துவங்கிய மறவரது ஆட்சியை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள் மன்னரைக் கைது செய்து திருச்சி சிறையிலும், பின்பு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும் சிறை வைத்த நிலையில் 1809 வருடம் ஜனவரி 23 ஆம் நாள் சென்னை சிறையிலேயே உயிர் துறந்த மாமன்னரை ரிபெல் என மக்கள் அழைக்கத் துவங்கினர்.

Monday, 6 June 2016

marathamilar senai


pudhumalar prabhakaran photo

maraththamizhar senai State Organizer pudhumalar prabhakaran photos - மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்கள். kallar, maravar, agamudaiyar Caste leader

புதுமலர் பிரபாகரன் புகைப்படங்கள்

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வரவேற்பு அட்டைகள்.

மண்ணின் மானம் காக்கும் மறவர் கூட்டத்தின் ஒப்பற்ற ஊழியராகத் திகழும்; மறவர் வரலாறு காக்கும் மாமறவன் அண்ணன் புதுமலர் பிரபாகரன் அவர்களின் கொள்கை வழி நடப்போம்....

Wednesday, 14 October 2015

puthumalar prabhakaran mobile number

 puthumalar prabhakaran mobile number 9942133644, 9952133644. மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் தொலைபேசி எண். அவசியமான தருணங்களில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள். 

Tuesday, 2 June 2015

Sivagangai 2nd Rajah — Muthu Vaduganatha Peria Oodaya Thevar

கெளரிவல்லப முத்துவடுகநாத ராஜா என்னும் மாமன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத்தேவர் அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். சின்ன மறவர் நாடாம் சிவகங்கை சீமையை அரசாட்சி செய்த இரண்டாம் மன்னர் ஆவார். அவரது 243 வது  நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது. 

அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். மறவர் சீமையின் மானம் காக்க வெள்ளையர்களோடு வீரப்போர் புரிந்து மறவாப்புகழ் பெற்ற மாமறவர் அவர்களது நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் விழாவில் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொள்கிறார். 

சுற்றுவட்டார பகுதியில் பெருந்திரளாக வாழக்கூடிய இளைஞர்கள் பங்கேற்று, மன்னரது தியாகத்தினை பரப்பிட வேண்டும்.